#goodmorning #happyvjayadashmi #happydussehra #happystatus #happymonday #happymorning #விஜயதசமிநல்வாழ்த்துக்கள் #perfectenterprises #thirumazhisai .வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்! கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளாதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்! கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணைவாசகத் உட் பொருளாவாள்! மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்! மக்கள்பேசும் மழலையில் உள்ளாள்! கீதம்பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்! கோதகன்ற தொழிலுடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்! இன்பமே வடிவாகிடப்பெற்றாள். வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்! வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர், வித்தை ஓர்ந்திடு சிற்பியர்,தச்சர் மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர், வீரமன்னர் பின்வேதியர் யாரும் தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறிவாகிய தெய்வம்! https://www.instagram.com/p/CGyo8W_FO7B/?igshid=a2tyrgduh4jr










