'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் 45 நாட்களில் தீர்வு – கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உறுதி
தமிழக அரசின் மக்கள் தொடர்பு முயற்சியாக நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் அமுதா, ஐ.ஏ.எஸ்., உறுதிபட தெரிவித்தார்.
அமைச்சரவையின் விரைவான சேவையை மக்களுக்கு கொண்டு செல்வதற்காக, அரசு முகாம்கள் நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பே மக்களுக்கு தகவல் அளிக்கப்படும்.
தற்போது வரை 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 1.01 கோடியுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
அரசின் முக்கியத் திட்டங்களான பட்டா மாற்றம், மின் இணைப்பு மாற்றம் உள்ளிட்டவை விரைவில் தீர்வு காணப்படும்.
ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்; நவம்பர் வரை 10,000 முகாம்கள் நடைபெறும்.
முன்பு 20,000 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் இருந்தது, இப்போது 10,000க்கு ஒரு முகாம் நடத்தப்படும்.
முக்கிய தகவல்: முகாம்கள் வாரத்தின் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களில் நடைபெறும். அரசு திட்ட சேவைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்வதே திட்டத்தின் நோக்கம் என அமுதா தெரிவித்துள்ளார்.









