கண்கள் எனது
பார்வை உனது..
Misplaced Lens Cap

Andulka

#extradirty
No title available
d e v o n
Aqua Utopia|海の底で記憶を紡ぐ

gracie abrams

bliss lane

No title available
EXPECTATIONS

shark vs the universe
"I'm Dorothy Gale from Kansas"
No title available
🪼

❣ Chile in a Photography ❣
Cosmic Funnies

oozey mess
YOU ARE THE REASON
let's talk about Bridgerton tea, my ask is open
NASA

seen from Malaysia
seen from United States
seen from United States

seen from Malaysia
seen from Nepal

seen from Argentina
seen from United States

seen from United States
seen from United States
seen from Brazil
seen from Brazil
seen from United States
seen from United States
seen from United States

seen from United States

seen from United States
seen from United States
seen from United States
seen from United States
seen from United States
@mathivadhanan
கண்கள் எனது
பார்வை உனது..
I’ve watched Korean movies but this is actually the first Korean series I’ve started watching. Now I’m realising why so many people love #Korean dramas. They carry a unique emotional essence of their own.
It’s been 3 days since I started watching #CanThisLoveBeTranslated picking it up in between small gaps of time. I’ve already completed almost 8 episodes. At times, it feels as if time itself freezes while I’m watching it. I’m truly enjoying the experience. 4 episodes remain, let’s see when I finally complete it.
யாரும் துணையில்லாத வெறுமையில் தான் நாம் நம்மை சந்திக்கின்றோம். அங்கே எல்லா முகமூடிகளும் விழும். அந்த நேரத்தில் ஒழுக்கம் மட்டுமே நம் அடையாளமாக இருக்கட்டும்.
Those who watched and loved the movie “Sarvam Maya” pls do watch tis Indonesian movie as well, “Sore: A Wife from the Future.” I hope u’ll luv it.
It feels like a vice-versa ending to Sarvam Maya, while #SarvamMaya has a sad ending, #SoreMovie offers a happy one but it’s equally deep. Try watching it once. 💙✨️
ஒரு ஆண் பெண்ணிடம் கொள்ளும் முதல் ஈர்ப்பிலோ, பின் வரும் ஈர்ப்பிலோ முதன்மையாகவும் மறைமுக காரணமுமாகவும் மோகம் இருக்கும். அவன் பழகும் விதத்தில் அவனுக்கு தெரியாமல் இருந்தாலும்கூட அதனின் அடிப்படை முதல் ஈர்ப்பு அப்படித்தான் இருக்கும் (அவன்-அவளை சகோதரி, தாய் அல்லது அவனது பெண்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளாத வரை). அதன்பிறகு காதலாகவோ காமமாக மாறக்கூடலாம். அப்படியிருக்கும் ஆணுக்கும் கூட ஒரு பெண் மீது எந்த மோகம், தாபமும் இல்லாமல் ஒரு உணர்வு வரக்கூடும், அது இன்னொரு ஆணால் மட்டுமே உணர முடியும் (ஒருவேளை அவனும் அந்த உணர்வை கடந்திருந்தால்). அப்படி ஒரு உணர்வு வாழ்நாளில் ஓரிரு பெண்ணிடம் மட்டுமே வரும். அந்த உணர்வை அழகான வரிகளில் சொல்லிருப்பார் வைரமுத்து இப்படியாக,
"எந்த பெண்ணோடு எழுவது காமமே,
அடி உன்னோடு தோணலயே! "
- இது என்னை பொருத்தவரை ஒரு நாத்திகனுக்கும் அவள்மீது தெய்வீக காதல் வருவதைப் போலொரு உணர்வு!
எப்போதாவது கேட்கும்
FM-யில் கூட
உன் நினைவுகளை
ஒலிபரப்புகிறார்கள்.
நான் வீடு செல்ல
5 கிலோமீட்டர் தான்.
ஆனால்
இதமாய் சுற்றித்திரிந்து
வீடு வர
40 கிலோமீட்டரானது.
Two extremes!
I’m striving to be a disciplined man in all aspects of my life, but at times, I find myself reacting like a boy instead of taking thoughtful actions.
பாடல்களின் வரிகளை புரிந்து இரசிக்கும் வயதிற்கு முன்னமே இசையினால் எனக்கு பல உணர்வுகளை கொடுக்க தொடங்கியவர் யுவன் சங்கர் ராஜா 💙
அரும்பு மீசை முளைக்கும் பருவத்தில் தான் எனக்கான இசை உலகமும் தொடங்கியது. என் பள்ளி பருவத்தில் முளைத்த காதலுக்கு இசை ஊற்றி வளர்த்தும் பின் அவள் இல்லையென ஆனபோது இசையினால் தோள் கொடுத்தும், என் எல்லா உணர்வுகளுடன் பயணிக்கும் தோழனாக இன்னமும் அமைந்திருக்கிறது யுவனின் இசையும் குரலும். எதார்த்தத்துடனும் அதிலிருந்து விலகி தன்னை தனியுலகில் வைத்துக்கொள்ள முயற்சிக்கும் போதும் கூட என் மனநிலைக்கு ஏற்ற, எனக்கான(நமக்கான) இசையை கொடுத்தவர் இவர். நா.முத்துக்குமாரின் வரிகள் எனக்கு உயிரென்றால் யுவனின் இசை எனக்கு மூச்சு 🌧️💗
என் பள்ளி நினைவுகளுடன் ஆழமாக கலந்திருக்கும் இசையே நான் கொண்டாட தொடங்கிய முதல் இசை எனினும் என் விரல் பிடித்தும் இசையினால் தோள் கொடுத்தும் சமயங்களில் மடி கொடுத்தும் எனக்கான இசை உலகை அறிமுகப்படுத்திய யுவன் சங்கர் ராஜா என்னும் எனக்கு மிகப் பிடித்த கலைஞனை நான் எப்போதும் கொண்டாட மறப்பதில்லை 💙
என் எல்லாவற்றையும் மறந்து நான் நானாக இல்லாதபோதும் கூட என் நினைவில் வருபவள் அவள். என்னைவிட என் எழுத்துக்களின் ஆழத்தை நேசிப்பவளின் மூலம் தான் என்னை அடிக்கடி மீட்டெடுத்துக்கொள்கிறேன். இப்படியான தேவதையை எப்படி விலகிச்செல்வேன். அவள் அவளாக இல்லாதபோதும், அவள் அவளாக இருமடங்கு பிரதிபலிக்கும்போதும் அவளுடன் எப்போதும் இருப்பேன் அவளுக்கு மிகப் பிடித்த மஞ்சள் நிறம் போல.
💛 | 15.04.2024
நான் நேசிக்கும்
ஒருவளும்
எனக்கு பிடித்தவளும்
என்னை நேசிக்கும்
ஒருவளும்
ஒருவரையொருவர்
பிடிக்காதவர்களும்
என்னை
மகனாகவும்
அண்ணனாகவும்
தம்பியாகவும்
தோழனாகவும்
பெற்றிருப்பவள்களும்
என்னுடன் வருவேன்
என்றவளும்
எனக்கு
வேறு துணை
கிடைக்கும்
என்றவளும்
நான் நகர்ந்து
வந்தவளும்
என்னை
நகர்த்தி விட்டு
சென்றவளும்
நான்
கொண்டாடுபவளும்
என்னை
கொண்டாடுபவளும்
காதல் , காமம்
கற்றுக்கொடுத்தவளும்
மனமும் உடலும்
ஒருசேர இணைந்து
பிரபஞ்ச சக்தியை
உணர வைத்தவளும்
இன்னமும்
அவளுக்காக
ஏங்க வைப்பவளும்
போ!
என நான்
துரத்தியவளும்
முத்தங்களில்
உயிர் உணர
வைத்தவளும்
இதுதான் வாழ்க்கை
என அலட்சியப்படுத்தியவளும்
சாப்டியா
என கேட்பதற்காக
ஏங்குபவளும்
என் நலத்தை மட்டும்
எதிர்பார்ப்பவளும்
உரிமையுடன்
பேசி / கேட்டு / கொட்டி
தீர்ப்பவளும்
ஏதோவொரு வகையில்
என் சிந்தனைகளை
நான் திணிக்கும்
ஒருவளும்
அவள் சிந்தனைகளை
என்னிடம் திணிக்கும்
ஒருவளும்
காதலுக்காக மட்டும்
ஏங்க வைப்பவளும்
காமத்துக்காக மட்டும்
ஏங்க வைப்பவளும்
என் இருப்பை மட்டும்
நேசிப்பவளும்
அவளின் இருப்புக்காக
ஏங்க வைப்பவளும்
புரிந்துகொள்ள முடியாத
ஒருவளும்
இப்படி
ஒவ்வொரு ஒருவளுக்கும்
பெண் என்று
பொதுப்பெயர்
"தேவதை" என்று
தனிப்பெயர்
நேசித்து
புரிந்துகொண்டு
விட்டுக்கொடுத்து
சமப்படுத்தி
வாழவிட்டு
காதலித்து
கொண்டாடுவதற்கு
365 நாட்களும்
மகளிர் தினமென்றாலும்
போதாது
அதை
மகளிர் தின வாழ்த்துக்கள்
என வாக்கியத்திலும்
வார்த்தைகளிலும் மட்டும்
அடிக்கிவிட முயலும்போது
நீயும் என்னைப்போல
ஒரு ஆணாக
இருக்கலாம்
எம் தேவதைகளுக்கு
தேவதைகள் தின வாழ்த்துக்கள்
💙✨️
-மதிவதனன்
ஏதோவொரு பாடல் என்ன செய்யும்?
ஒரு பிரிவின் வலியை தாங்கமுடியாமல் தவிக்கும்போதெல்லாம் இறுகப்பற்றிக்கொள்ளும்.
வலியை அழுகையாய் மாற்றி தழும்பாக்கும்.
பின் எப்போது கேட்டாலும் அழகாய் ஒரு மென் புன்னகையூட்டும்.
#AgarTumSaathHo
ஒரு கவிதைக்காக
மணிநேரம் காத்திருக்க
வேண்டியிருக்கிறது
ஒரு கவிதை
யோசிக்காமலே வருகிறது
ஒரு கவிதையில்
சொற்கள் மாறிமாறி
இடம்பெறுகின்றன
ஒரு கவிதை
என்னை விழுங்கி
வரிகள் ஆகிறது
ஒரு கவிதை
காலம் முழுக்க
மனதில் மட்டுமே இருக்கிறது
எழுதாமல்
ஒரு கவிதையை
நான் எழுதுகிறேன்
ஒரு கவிதை
என்னை எழுதுகிறது.
ஒவ்வொரு முறையும் பாலியல் குற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் எனக்குள் எழும் கேள்விக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதில் கிடைக்கிறது. இப்படியான குற்றங்கள் செய்யும் மிருகங்களை கடுமையாக தண்டித்தல் அவசியம் என்பது ஒருபுறம் இருந்தாலும் அப்படி தண்டனைகள் தரும் பட்சத்தில் இவ்வகையான குற்றங்கள் முற்றிலும் ஒழியுமா என்பதில் சந்தேகம் தான்.
இந்த காமவெறி, சாதிவெறி, மதவெறி, ஆளுமைவெறி, அதிகாரவெறி என்ற எல்லா கருமமும் ஒருவர் நாகரீகமாவதை தடுத்து சமமெனும் சமத்துவ எண்ணத்தை துளியும் எழவிடாமல் செய்கிறது.
தான் பெற்ற மகள், பேத்தி, மருமகள் என கூச்சமே இல்லாமல் பாலியல் ரீதியாக சீண்டும் ஆண்கள் இருக்கும் பட்சத்தில் இந்த மிருகங்களின் மனநிலை எவ்வாறாக இருந்திருக்க கூடும்.
இந்த "நான்" தான் எனும் அகங்கார எண்ணம் ( அது காதல், காமம், உரிமை, திறமை, அதிகாரம், ஆளுமை, குடும்பம், உறவுகள், நட்பு என எதில் இருந்தாலும் ) அது ஒழியும் அல்லது சமநிலையை அடையும் வரை ஒருவரின் வாழ்வு தூய்மையாக முழுமையடையாது.
கலை, காதல், காமம், கடவுள், என எதுவாயினும் ஒரு மனிதனை நல்வழியில் நடத்தவும் மற்றவரை நேசிக்க கற்றுக்கொடுக்கவும் வாழ்வை புரிந்துகொண்டு அதை அழகாக்கவுமே படைக்கப்பட்டிருக்கிறதென நம்புகிறேன். அதை வைத்து அரசியல் பேசாமல் தன் உளவியலை நன்றாக பார்த்துக்கொள்வது மிக அவசியமாக கருதுகிறேன்.
மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
உனக்கு உன் தாத்தாவை ரொம்ப பிடிக்கும்..
உன் தாத்தா உன்னை எவ்வளவு நேசிச்சாருனு எனக்கே என்கிட்ட மட்டும் தான் அவ்வளவு சொல்லிருக்க..
உன் நினைவுகளால் நிரம்பி கிடக்கும் எனக்கு,
என் கனவுகளில் வந்த உன் தாத்தா,
அவளொரு குழந்தையென்றார்.
மெல்லிய சிரிப்புடன் அதனால் தான் இன்னும் அவளை நேசித்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்.
🌻💙