ஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்! பேரரசு !
இந்தியாவில் கொரோனா நோய் பரவலை தடுக்க வரும் அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அதில் ஒன்றான ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவித்தியுள்ளது ஏழை எளிய மக்களுக்கு பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதில் திரைப்பட தொழிலாளர்களும் வேலை இல்லாத காரணத்தினால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர், இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு, 1,500 பேருக்கு அவர் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
அனால் பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அதையும் மீறி செய்திகள் வெளிவந்து விட்டது. இதன் விளக்கத்தை பேரரசு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதன் விவரம் வருமாறு .
“ ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்! இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது “பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் “என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம் பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது! என்று கூறியுள்ளார்.