#ஏதிலி ~ நாவல் @ அ.சி.விஜிதரன் ₹ 250/- தொடர்ந்து தமிழ் நிலத்தில் ஈழத்தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பதை எளிதாக அவதானிக்க முடியும். இன்னும் சிலரோ ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை மயிர்க்கூச்செறியும் வார்த்தைகளால் பேசி பேசி தலைவராக தலையெடுத்த வரலாறும் தமிழகம் அறியும். ஆனால், உண்மையில் இலங்கையில் தமிழ்மக்களுக்கு என்னதான் நடந்தது? முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொன்றொழிக்கப்பட்டதற்குக் காரணம் யார்? குற்றுயிரும் குலைஉயிருமாய் அகதிகளாய் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வுரிமைக்காக வலுத்து குரல் எழும்பதாது ஏன்? இக்கேள்விகளுக்கான அர்த்தமிக்க ஒரு உரையாடலை நகர்த்திச் செல்வதாக "ஏதிலி" படைப்பு அமைந்துள்ளது. ஏதுமற்ற, ஏதுமற்றவர்களாக்கப்பட்ட ஈழ அகதிகளின் வாழ்வியலே நூலின் மையப்பாத்திரம். இதனோடு இணைந்தும் ஒட்டியும் வெட்டியும் ஓடிக்கொண்டிருக்கும் கதைகளை நுட்பமான இழைகளால் பின்னிப்பிணைத்து நாவலாக்கப்பட்டுள்ளது. சொல்ல வேண்டுமென முடிவெடுத்து விட்டகுறை தொட்டகுறை என்றில்லாமல் தேர்ந்த தெளிவோடு பகுதி பகுதியாக பேசி முழுமையை வாசகர் உணரச்செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது "ஏதிலி". இலங்கை அதிகாரவர்க்கத்தினரால் நிர்மூலமாக்கப்பட்ட, விடுதலை இயக்கங்களின் அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்ற, பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட, மக்கள் மறுவாழ்வுக்காக குடியமர்ந்த தமிழக மண்ணில் எதிர்கொண்டுவரும் இன்னல்களும், வலிநிறைந்த வாழ்வியலும் மணக் கண்முன்னே காட்சிப்படும்போது ஜனநாயக சக்திகள் செய்யமறந்தது, மறுத்தது, மறுக்கப்பட்டு கொண்டிருப்பது கண்முன்னே ஓடி கலங்கடிக்கிறது.. நிகழ்கால நிகழ்வுகளை வரலாற்றுப் பின்புலத்தில் புரிந்து எதிர்கால இலக்குகளை நோக்கி நகர்த்தும் அரசியல் தெளிவும், இருபத்தியோராம் நூற்றாண்டு இளம்தலைமுறை எழுத்தின் உக்கிரமும், ஒருங்கே அமைந்த படைப்பு "ஏதிலி". ஒவ்வொரு அத்தியாயத்தின் இடையில் பொருத்தமான பாடல் வரிகளும், இதற்கு ஏற்றாபோன்ற நூல்வடிவமைப்பும் வாசிப்புக்கு வாசகரை இழுத்துச் செல்கின்றன.. #நன்றி: தீக்கதிர் (30/09/19) #புத்தகத்திற்கு: தமிழ்வெளி +91 90 9400 5600 #Tamizhveli #VasanthiKala https://www.instagram.com/p/B3C57YbHU0O/?igshid=o63i0yyybsph
















