#ஜனவரி_புத்தகக்_கண்காட்சி_வெளியீடு ~ 01 #அன்னா_ஸ்விர்_கவிதைகள் @ தமிழில்: #சமயவேல் Samayavel Karuppasamy விலை ரூ.100/- #தமிழ்வெளி_வெளியீடு: 04 #CBF2019 தனது கவிதைகளில் “ஒர் உயிரின் ஆர்ப்பரிக்கும் அடங்கா ஆசைகளை ரத்தமும் சதையுமாக எழுத” முயற்சித்ததாகக் குறிப்பிடும் அன்னா ஸ்விர் (1909 – 1984), போலந்தின் மிக முக்கியமான கவிகளில் ஒருவர். பெண்ணிம், காமக்கிளர்வு வழியாக வெளிப்படும் அவரது கவிதைகள், பெண் உடலின் வாதைகளையும் சந்தோஷங்களையும் ஒருங்கே பதிவு செய்கின்றன.. இரண்டாம் உலகப் போரில் ‘வார்ஸா’ நகரமும் அதன் ஒரு மில்லியன் மக்களும் மொத்தமாக அழிந்து போனதை நுண்சித்திரக் கவிதைகளாகப் பதிவ செய்தவர். ஏழ்மையான ஒரு ஓவியரின் மகளாக வளர்ந்த அன்னா ஸ்விர், தனது அப்பா, அம்மா பற்றிய கவிதைகளில், மிகக் குறைந்த சொற்களில் பெரும் வலி கொண்ட சொற்சித்திரங்களை வரைந்துவிடுகிறார். மிகத் தீவிரமான அவரது சொந்த வாழ்வின் அனுபவங்களின் வழியாக ஊற்றெடுக்கும் கவிதைகள், மொத்த வாழ்வின் அர்த்தமின்மை, அர்த்தம் ஆகிய இரண்டிலும் காலூன்றி நிற்பதின் முரண் சிக்கலை மிக எளிதாகக் கடந்துவிடுகின்றன.. நோபல் பரிசு பெற்ற கவிஞர் சீஸ்லாவ் மிலோஸ்ச், உலகெங்கிலுமுள்ள பெண் கவிகளில் மிக வித்தியாசமானவர் அன்னா ஸ்விர் என இவரைக் கொண்டாடுகிறார்.. ** #புத்தகத்திற்கு: +91 90 9400 5600 *Pls like & follow us: www.Facebook.com/Tamizhveli #Tamizhveli #VasanthiKala https://www.instagram.com/p/BrDkxQ8HDwP/?utm_source=ig_tumblr_share&igshid=waamu50qvd06