The world is not a wish-granting factory🌍 The fault in our stars💫 An lovely novel with an⭐ unconditional love and emotions Do read and watch this novel 💫 (at Pudukkottai) https://www.instagram.com/p/B_PwMHspWPH/?igshid=k6f23t0wn4hz

blake kathryn

shark vs the universe
$LAYYYTER
One Nice Bug Per Day

Janaina Medeiros
Monterey Bay Aquarium
i don't do bad sauce passes
AnasAbdin
hello vonnie

Product Placement
wallacepolsom
Alisa U Zemlji Chuda
Keni
Not today Justin
art blog(derogatory)
Peter Solarz
KIROKAZE

Kaledo Art
Cosmic Funnies

Origami Around

seen from United Kingdom

seen from United Kingdom
seen from United States
seen from Germany

seen from United States

seen from Türkiye

seen from Sweden
seen from Germany
seen from Hungary
seen from United Kingdom
seen from Spain
seen from Poland
seen from United States
seen from United States
seen from Germany
seen from T1
seen from United States
seen from United States
seen from Germany
seen from T1
@tamilanexplorestn
The world is not a wish-granting factory🌍 The fault in our stars💫 An lovely novel with an⭐ unconditional love and emotions Do read and watch this novel 💫 (at Pudukkottai) https://www.instagram.com/p/B_PwMHspWPH/?igshid=k6f23t0wn4hz
Bring your hidden talents to the new era #bringtheheat #tamilanexplores (at Pudukkottai) https://www.instagram.com/p/B-2IF1ipo4Y/?igshid=1d1r23u42haey
Our upcoming quest for you all folks Stay tuned ........ #archeology #tamilnadu #worldtraveler #quest #clouds #surveyquest #element #tamilanexplores (at Tamil Nadu) https://www.instagram.com/p/B-oOo7bp1ES/?igshid=1th6dojt3svwp
Believe in yourself. You are braver than you think, more talented than you know, and capable of more than you imagine. Be a part us 😊 #tamilanexplores #tamilantravel #beingexplored #covid_19 #igdaily #followforfollowback #promotion #worldtraveler #crisis #standwithdoctors #worldcause (at புதுக்கோட்டை) https://www.instagram.com/p/B-KSx60pRRA/?igshid=1fu2lz6cfrr9w
a lot of people have seen the futility of their lives, constantly ripped off by the banks, employed by the slaver corporations, lied to by politicians, manipulated by social media, spied on by everyone else... Stay home stay safe Social distancing #corona #standwithdoctors #tamilmemes #memes #awarness #jantacurfew #socialdistancing #socialmemes #beingtamilan #beingexplored #tamil #educateyourself (at Pudukkottai) https://www.instagram.com/p/B-Fjn-JpMNI/?igshid=uyxsreg5rcoe
#மொழி_கற்க
ஒரு புதிய மொழியை கற்பது நம்மில் பல பேருக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் சிலருக்கு பயத்தையும் ஏற்படுத்தும். தாய்மொழி அல்லாத பிற மொழிகளை பல்வேறு தேவைகளுக்காக கற்க முயற்சிகளை பலர் எடுத்து வருகின்றனர்.
புதிய மொழியை கற்பதின் மூலம் அம்மொழியின் சொந்தக்காரர்களின் சமூகம் கலாச்சாரம் பண்பாடு உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் பலவற்றை குறித்து அறிய முடியும். வருவாயும் ஈட்டி தரும்.
சரி, இப்போ ஒரு மொழியை கற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
👩 உங்கள் குறிக்கோளை உறுதி செய்யுங்கள்.
எதற்காக புது மொழியை கற்க வேண்டும் என்ற உங்கள் காரணத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருங்கள். இது மட்டுமே உங்களை கடைசி வரை கைபிடித்து இட்டு செல்லும்.
👨ஒரு துணையை தேர்ந்தெடுங்கள்.
புது மொழியை தனியாக கற்பது மிகவும் சோர்வூட்டும். ஒரு துணையுடன் பயிலுங்கள். ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி கொண்டு எளிமையாகவும் ஆர்வமாகவும் பயில முடியும்.
👧உங்களுக்குள் பேசுங்கள்.
மற்றவர்களிடம் பேச வாய்ப்பு இல்லையென்றால் உங்களுக்குள் பேசி பயிற்சி எடுங்கள்.
👦பயனுள்ளதாக மாற்றுங்கள்.
உங்கள் குறிக்கோளுக்கு தொடர்பான பயிற்சிகளில் ஈடுபடுங்கள். வெளிநாடு சுற்றுலாவிற்கு செல்வதாக இருந்தால் இடங்கள் பெயர், பயணம் போக்குவரத்து, தங்கும் விடுதி போன்றவற்றை சமாளிக்கும் வகையில் உங்கள் பயிற்சியை செய்யுங்கள்.
👴ஆர்வமிக்கதாக செய்யுங்கள்.
உங்கள் பயிற்சிகளை உங்களுக்கு ஆரவமூட்டும் வகையில் உங்கள் துணையுடன் செய்யுங்கள்.
👶குழந்தைகளை போல் கற்று கொள்ளுங்கள்.
கூச்சத்தை தள்ளிவைத்து மற்றவர் என்ன நினைப்பார் என்ற நினைப்பை விட்டு ஒரு குழந்தையாக மாறி உங்கள் பயிற்சியை செய்யுங்கள். பிழைகள் செய்வதன் மூலம் குழந்தை கற்றுக்கொள்கிறதோ நீங்களும் அப்படியே கற்றுக்கொள்ள முடியும்.
👷ஒரு வட்டத்திற்குள் நிற்காதீர்கள்.
உங்கள் பயிற்சி வட்டதை விட்டு வெளியே வந்து மற்றவர்களிடம் இந்த மொழியில் பேச வேண்டும். பிழைகளும் தவறுகளும் செய்வதன் மூலமே நம்மை திருத்தி கொள்ள முடியும்.
👨காது கொடுத்து கேளுங்கள்.
அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் பேசுவதை காதுகொடுத்து உன்னிப்பாக கவனிப்பதன் மூலமே அம்மொழியில் வார்த்தைகளின் உச்சரிப்புகளை சரியாக புரிந்துகொண்டு நாம் சொல்லி பழக முடியும்.
👦மற்றவர்கள் பேசுவதை காணுங்கள்.
அம்மொழியில் மற்றவர்கள் பேசும்போது அவர்கள் உதடு அசைவுகளை உற்று காண வேண்டும். உதடு அசைவுகளை கவனிப்பதன் மூலம் நம் உதடை எவ்வாறு அசைத்தால் சரியான வார்த்தை உச்சரிப்பு வரும் என்பதை கற்றுக் கொள்ள முடியும்
👧தினமும் பயிற்சி செய்யுங்கள்.
மேலே கூறப்பட்ட அனைத்து முறைகளையும் பின்பற்றி பயிற்சி பெற்ற பிறகு அந்த மொழியில் தினமும் பேச வேண்டும். தினமும் கட்டாயம் பேசுவதன் மூலமே அந்த மொழியில் சரளமாக பேச தன்னம்பிக்கை வரும்.
இறுதியாக மொழி என்பது அம்மொழிக்கு சொந்தமான சமூகத்தின் அறிவை பெறுவதற்கான வழிவகுக்குமே ஒழிய ஒரு மொழியே "அறிவு" ஆகிவிடாது
நம்ம ஊர்ல ஆங்கிலம் தெரிந்தவன் எல்லாம் அறிவாளி அப்படின்னு நினைக்கிற முட்டாள்கள் தான் அதிகம்!
#பல்லக்கு_உரிமை
ராணுவவீரர் ஆகாஷ் கோட்டியா என்பவர் திருமணம் குஜராத் பானஸ்கந்தா மாவட்டத்தில் நடந்தது. அவர் தக்கோர் சமூகத்தை சார்ந்தவர்களால் புதுமாப்பிள்ளையாக குதிரையில் வந்ததால் கல்லெறியபட்டு தாக்கபட்டுள்ளார்.
ராணுவ வீரரே ஆனாலும் அவர் கடைநிலை சமுகமானதால் குதிரையில் பயணிக்க அனுமதி இல்லையாம்! பிரச்சனை வர வாய்ப்புண்டு என்பதால் காவல்துறை பாதுகாப்பு கேட்டும் ஏழு காவலர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு வந்தார்களாம். அதையும் மீறி கீழ் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் ராணுவ வீரரும் குடும்பத்தினரும் தாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பல்லக்கில் செல்வது குதிரையில் செல்வது உயர்குடியினருக்கு மட்டுமான உரிமை. இது இடைநிலை கடைநிலை சமூக மக்களுக்கு அனுமதி கிடையாது. மீறினால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது.
தச்சர் ஒருவர் தன் மகன் திருமணத்திற்கு மாப்பிள்ளையும் பெண்ணையும் பல்லக்கில் ஊர்வலம் செல்ல தஞ்சையை ஆண்ட துளசி மகராசரிடம் அனுமதி பெற்றார்கள். ஆனால் உயர் குடியினர் பிரச்சனை செய்யவே துளசி மகாராஜா படைவீரர்களை அனுப்பி பாதுகாப்புக்கு உத்தரவிட்டார். அந்த தச்சர் திருமண ஊர்வலத்திற்கு அரசு பாதுகாப்போடு வந்த போது உயர்குடியினர் மாப்பிள்ளையும் பெண்ணையும் வெட்டி அவர்கள் தலைகளை ஈட்டி முனைகளில் கட்டி தெருவுக்கு தெரு சென்று கடைக்கு கடை பணம் வசூலித்தார்கள்.
விலை உயர்ந்த பொன், பித்தளை ஆகியவற்றை கொண்டு தொழில் செய்த தச்சர் நிலையே இப்படி இருந்திருந்தால் அதுக்கும் கீழே உள்ள அடித்தள மக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும்?
தேசத்திற்காக வாழ்க்கையை அற்பணித்த ராணுவ வீரரானாலும் குதிரையில் ஏறக்கூடாது. இங்கு அரசியல் அமைப்பு சட்டம் அனைவரும் சமம் என்றாலும் பண்டைய ஏற்றத்தாழ்வு சட்டங்கள் உயிர்ப்போடு இன்றும் ஆட்சி செய்கின்றது.
இந்த ஏற்றத்தாழ்வு கட்டமைப்பு யாருக்கு மதிப்பு தருகிறதோ அவர்கள் மட்டுமல்லாமல், அதனால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு கீழேயும் நிறைய மக்கள் உள்ளனர் என்பதில் பெருமிதம் அடைய வைக்கிறது.
தேசத்தை காப்பாற்ற ரத்தம் சிந்தினாலும் உயிரைவிட்டாலும் உன் குடும்பமும் உன் குழந்தைகளும் தொடர்ந்து நீ விட்டுச்சென்ற அதே கீழான சமூகமாக தான் இருப்பார்கள் என்பதையே ராணுவவீரர் ஆகாஷ் கோட்டியா நினைவு படுத்துகிறார்.
#இயற்கை_தானே
கல்லூரி விடுமுறைக்கு மாமாவின் வீட்டிற்கு சென்று இருந்தேன். அன்றைய நாள் முழுவதும் அத்தை, மாமாவை எடுத்தெரிந்தே பேசிக்கொண்டு இருந்தாள். வெறுப்புடனும், கோபமாகவும் இருந்தாள். சிறிது நேரம் கழித்து அழ ஆரம்பித்தாள். இதை அனைத்தும் பொறுமையாக கையாண்ட மாமா பதிலுக்கு ஆறுதல் கூறி, ஓய்வு எடுக்க சொல்லி அறைக்கு அனுப்பிவிட்டார்.
"ஏன் மாமா அத்தை இன்னைக்கு இம்புட்டு கோவமா இருக்கு?" என்றேன். சொல்றேன் மாப்ள முதல்ல டீ சாப்பிடு என்றார். "சொல்லுங்க மாமா என்னா ஆச்சு...?" அது ஒன்னும் இல்லைடா மாப்ள, மாசத்துல ஒருக்கா இப்படி ஆகும். ரெண்டு நாள்ல சரியாகிடும். "புரியலை மாமா. விளக்கமா சொல்லுங்க.."
டேய் மாப்ள, பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பிக்க 5 முதல் 7 நாளைக்கு முன்ன, இந்த மாதிரி கோவம், பயம், படபடப்பு, வெறுப்பு, அழுகை போன்ற மனச்சோர்வுகள் வரும்டா. "என்ன மாமா சொல்லுற? புரியலையே.."
அதாவது மாப்ள, பெண்களுக்கு மாசம் ஒருக்கா வர மாதவிடாய் நின்றதுக்கு அப்புறம் "ஈஸ்ட்ரோஜன்" என்ற ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும் டா. இதுக்கப்புறம் இரண்டு வாரம் கழிச்சு "புரஜெஸ்ட்ரான்"ன்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ரெண்டு ஹார்மோன்கள் தான் பெண்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் தர ஹார்மோன்கள். இது தான் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி செய்யவும், கருப்பை உட்புற திசுக்கள் வளர உதவும் ஹார்மோன்கள்.
மாதவிடாய் ஆரம்பிக்க 7 நாளுக்கு முன்ன இந்த ஹார்மோன் சுரப்பது குறைஞ்சிடும். அதுனால பெண்களுக்கு மனச்சோர்வு, பயம், கோவம், படபடப்பு, வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகள் தோன்றும். இதை மருத்துவத்துறைல பி.எம்.எஸ்(pre menstrual syndrome) ன்னு சொல்லுவாங்க. இதை பத்தி பெண்கள் நல மருத்துவர் டாக்டர்.சுசித்ரா அவர்கள் நிறைய சொல்லி இருக்காங்க. இந்த மாதிரி நேரத்துல பெண்களுக்கு அன்பும் ஆதரவுமா இருந்தா இரண்டு மூனு நாள்ல பழைய நிலைக்கு வந்துடுவாங்க மாப்ள.
அதவிட்டுட்டு நாமும் பதிலுக்கு சண்டை போட்டுகிட்டு இருந்தா, அவங்களுக்கு இன்னமும் மன அழுத்தம் கூடி பெரிய பிரச்சனைல போய் முடிஞ்சிடும் மாப்ள. இதை கவனிச்சி அவங்களுக்கு பக்கபலமாக இருக்கனும். ஏனா சில நேரங்களில் தொடர்ந்து மனச்சோர்வாகவே இருப்பாங்க. அந்த நேரத்தில் டாக்டரை போய் பார்த்து சரியான மாத்திரை எடுத்துக்கனும். இல்லைனா தற்கொலைய கூட சில நேரங்கள்ல தூண்டி விட்டுடும்.
அதேபோல இது சாதாரண "இயற்கை" நிகழ்வு தான். ஏதோ நோயா இருக்குமோன்னு பயப்பட வேண்டியதில்லை.
"சூப்பர் மாமா... அற்புதமான தகவலை இன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டேன்."
இதுக்கு தாண்டா மாப்ள, நாங்க பள்ளிக்கூடத்துல மேல்நிலை மாணவர்களுக்கு பாலியல் சார்ந்த கல்வியை கொடுக்கச் சொல்லி திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருக்கோம் அப்படினு மாமா சொல்லி முடிச்சாரு.
அப்ப தான் வீட்ல அக்கா சில நாட்கள் மட்டும் ஏன் ரொம்ப எரிச்சலா ஆகிட்டே இருப்பான்னு யோசிச்சு பாத்தேன்.
#படித்தால்_போதுமா?
தம்பதியினர் இடையே பிரிவு வருவதற்கு முக்கியமான காரணம் ஒருவருக்கொருவர் சிறிய குறைகளை பெரிதாக்குவதும், நன்மைகளை கவனிக்காமல் போவதுமே.
ராம் தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து நண்பர்கள் 8 பேர் வீட்டுக்கு வருவதாகவும். இரவு உணவு சமைத்து வைக்குமாறும் சொன்னான். என்ன சமைக்க வேண்டும் என கேட்டதற்கு, சிலர் சோறு சாப்பிடுபவர்கள் சிலர் இரவு சப்பாத்தி சாப்பிடுவார்கள். எனவே, இரண்டையும சமைக்குமாறு சொன்னான்.
அவளும் மாலை முதலே சமைக்கத் தொடங்கி இரவு கணவனும் நண்பர்களும் வரும்போது உணவு தயார் செய்து வைத்திருந்தாள். சாப்பாட்டு மேசையில் அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு கணவன் அருகே சாப்பிட அமர்ந்தாள்.
ஒருவர் தனக்கு சுடுதண்ணீர் வேணும் என கேட்டார். எழுந்து தண்ணீர் சுடவைத்து வருவதற்குள் அனைவரும் உணவு உண்ண துவங்கி இருந்தார்கள். மீண்டும் சாப்பிட ஆரம்பித்ததும் மற்றொருவர் ரொட்டித் துண்டுகள் கிடைக்குமா எனக் கேட்டார். ரொட்டி டோஸ்ட் செய்து எடுத்து வந்து சாப்பிட அமரும் போது உணவு பாதிக்குமேல் காலியாயிருந்தது. ராம் மனைவியை பார்த்து அனைவருக்கும் கிரீன் டீ போட்டு எடுத்து வருமாறு சொன்னான். டீ போட்டு எடுத்து வருவதற்குள் உணவு முழுமையாக காலியாக இருந்தது.
டீ பருகிய வாரே பேசிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக கிளம்பி சென்றார்கள். அவளுக்கான உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். அனைவரும் சென்றதும் சமையலறைக்குள் கோபமாக வந்த ராம் வீட்டுல வர்றவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் முன்னே உங்க அம்மா சொல்லி வளர்க்கவில்லயா என கத்தினான்.
ஏன் என கேட்டாள். வீட்டுக்கு வருபவர்களை வாசல் வரை வழியனுப்பி வைக்க வேண்டியது வீட்டில் உள்ள பெண்களின் கடமை. "கிராமத்துக்காரி உனக்கு என்ன இங்கிதம் தெரியும்?" என மேலும் கத்தினான். இரவு உணவு உண்ணாமலேயே அழுதுகொண்டே படுக்கைக்கு சென்றாள்.
பெண்கள் உழைப்பை ஊதாசினப்படுத்துவது அவர்கள் உழைப்புச் திருடுவது ஆகும். தாய் சகோதரி மனைவி என யாராக இருந்தாலும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அவர்கள் செய்யும் உழைப்பை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. சமையல், வீடு சுத்தம் செய்வது, குழந்தை பெறுவது என்ற வேலைக்காக படைக்கப்பட்டவர்கள் அல்ல பெண்கள்.
நாம் அப்படி நினைப்பதால் அவர்களை பாராட்டவோ கனிவான வார்த்தைகளை பேசவோ தவறி விடுகிறோம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கவேண்டும் என்றால் அதை மகிழ்ச்சிக்குரியதாக நீங்கள் தான் மாற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் செய்யும் நன்மைகளையும் பாராட்டுவதும், வேலைகளில் சிறு உதவி செய்வது கூட உறவுகளை வலுப்படுத்தும்.
#பூமி மனிதனுக்குமட்டுமா?
சனவரி மாதம் தொடர்ந்து அஸ்திரேலியாவிலிருந்து வந்த உயிருடன் எரிந்து போன வாயில்லா ஜீவன்களின் புகைப்படங்கள் நெஞ்சை பதற வைத்தன. 100 கோடிக்கு மேலான விலங்குகள் தீயில் கருகியதாக நீங்களும் கட்டாயம் செய்திகளில் கவனித்திருப்பீர்கள். அது, திடீரென்று ஒரு நாள் காலநிலை மாற்றம் காரணமாக உருவான காட்டுத்தீ அல்ல.
2018ல் ஐ.நா சபை ஒரு அறிக்கையை வெளியிட்டது. காலநிலை மாற்றத்தை தடுக்க முடியாது, காலநிலை மாற்றம் காரணமாக நடக்கும் பெரும் இயற்கை சீற்றங்களில் இருந்து காத்துக் கொள்ள 12 வருடங்கள் மட்டுமே நமக்குஇருக்கிறது. இன்றைய காலநிலை மாற்றத்தின் காரணமான வாய்வுகளில் 70 சதவீதத்தை வெளியேற்றுவது வெறும் 100 கார்ப்பரேட் கம்பெனிகள்.
எடுத்துக்காட்டுக்கு அமெரிக்காவை சார்ந்த கோச் தொழிற்சாலை (Koch Industries) 24 மில்லியன் டன் கரியமில வாயுவை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுப்புற சூழலில் கக்குகிறது. 1970களிலேயே பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தங்களால் காலநிலை மாற்றம் சீரழிவது தெரிந்திருக்கிறது. ஆய்வாளர்கள் காலநிலை மாற்றத்தை குறித்து பேசியபோது முதலாளிகள் பணம் செலவழித்து எதிர் பரப்புரை செய்திருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டுக்கு Global Climate Coalition என்ற அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தது உலகின் மிகப்பெரிய எண்ணெய் எரிவாய்வு கம்பனிகளில் ஒன்றான எக்சான் (Exxon). 1980 முதலே அமெரிக்க அரசு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் இயற்றுவதை இந்த சக்தி வாய்ந்த அமைப்பு தடுத்து வந்தது. தற்போது அது வெளியேற்றும் ஒரு டன் கார்பனுக்கு 40 டாலர் தருவதாக கூறி இருக்கிறது. இது, மக்கள் கோபத்திற்கு பயந்து வியாபாரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களை அரசு இயற்றுவதை தடுக்க ஒரு யுக்தி மட்டுமே.
நாம் மரம் நடவும் ஒவ்வொரு துளி தண்ணீரைச் சேமிக்கவும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கார்ப்பரேட் பாதகர்களோ கரியமில வாயுவை சூழலிலிருந்து உறிந்தெடுக்க எந்திரங்களை கண்டுபிடித்து லாபம் சம்பாதிக்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வை பணமாக்க தடுப்பணைகள் கட்டவும், மிதக்கும் நகரங்களை உருவாக்கவும் வணிக வாய்ப்புகள் கிடைக்குமா என கழுகுகளாக வட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
1970ல் காலநிலை மாற்றத்தை குறித்து அறிந்ததும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் வாயில்லா ஜீவன்கள் உயிருடன் துடி துடிக்க இறந்திருக்காது. கடல் மட்டம் உயர்ந்திருக்காது. காலநிலை அகதிகள் உருவாகி இருக்கமாட்டார்கள்.
நம் ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்கள் விசுவாசிகளாக அல்லாமல், நம் குழந்தைகளுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் முதன்மை விசுவாசிகளாக மாறி இந்த பூமியை காப்பாற்றும் திட்டங்களை உருவாக்க கட்டாயப்படுத்த வேண்டும்.
Our second video is out now Check it out Link in bio Tamilan Explores #tamilanexplores #beingexplored #pudhugaikalanchiyam (at புதுக்கோட்டை) https://www.instagram.com/p/B8vb7TEJodI/?igshid=zn2k9kc8ew9r
Pudhugai kalanchiyam episode-1 is out Kindly watch and share And tell us your thoughts #beingexplored #tamilanexplores @sentinel_whisk @prinze_vj Link is in bio (at புதுக்கோட்டை) https://www.instagram.com/p/B8bUP5bJNp-/?igshid=njd6ni22krag
The flower that follows the sun does so even in cloudy days Every flower must grow through dirt. Even more people #beingtamilan #photographer#freelance #journalist#traveller #beingexplored #explored (at Some Where under Same Sky) https://www.instagram.com/p/B8Wqvn3p27P/?igshid=1v5hurlrdvs76
To provide meaningful architecture is not to parody history but to articulate it Enough for the future of the greatest Vijayalaayacholan temple in Pudukkottai Explored by tamilan Explores team @prinze_vj @sentinel_whisk @tamilan__explorestn #cholan #emperor #vijayalayacholan#beingexplored #tamilanexplores (at புதுக்கோட்டை) https://www.instagram.com/p/B8PKoOtJ0Hb/?igshid=c4hb5lnwydml